சென்னை: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக போட்டியிட்டவரை மீண்டும் எப்படி அதிமுகவில் கட்சியில் சேர்க்க முடியும். தேர்தலில் வெற்றி பெற்றால் ஒன்றிய அமைச்சராகிவிடலாம் என்ற ஆசையில் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.