சென்னை: கிளாம்பாக்கம் – திருவள்ளூர் இடையே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை அறிமுகம் செய்துள்ளனர். திருமுடிவாக்கம் சிட்கோ, பூந்தமல்லி பேருந்து நிலையம், திருமழிசை, மணவாளன் நகர் ஆகிய பகுதிகள் வழியாக பேருந்து இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 297 என்ற பேருந்து 05.00, 07.00, 09.00, 11.00, 13.00, 15.00,17.00, 19.00 நேரங்களில் புறப்படும்.