திண்டுக்கல்: ராஜக்காபட்டியில் மருத்துவர் சுரேஷ் பெர்பெத் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கதவை உடைத்து காவல்துறையினர் உள்ளே சென்றபோது மருத்துவர் சுரேஷ் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. மருத்துவர் சுரேஷ் பெர்பெத் உடலை கைப்பற்றி தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.