பீகார்: ராஜ்கிர் பகுதியில் உள்ள நாளந்தா பல்கலை.யில் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். நாளந்தாவின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்திற்கு அருகே புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளது. வளாகத்தில் சோலார் மின் உற்பத்தி, குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாளந்தா பல்கலை.யில் உள்ள பழங்கால இடிபாடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோடி நிகழ்வில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அமைச்சர் ஜெய்சங்கர். 17 நாடுகளின் தூதர்கள் பங்கேற்றனர்.