கரூர், ஜூன் 19: கரூர் ஈரோடு சாலை உதயா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்(40). இவர், உழைப்பாளி நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நான்கு சக்கர உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் நடத்தி வந்துள்ளார். இந்த தொழிலில் தேவையான அளவு லாபம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மனநிலையில் இருந்த வந்து சுரேஷ், கடந்த 17ம்தேதி மாலை வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில், டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.