செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு கடன் சங்கத்தின் லாபத்தொகையினை சங்கங்களின் இணைப்பதவாளரிடம் வழங்கப்பட்டது. கல்பாக்கம் அணுசக்தித்துறை ஊழியர்கள், கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய கடன் சங்க லாபத்தொகையிலிருந்து செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு சேர வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ₹20,41,371 மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ₹13,60,914 மற்றும் ஆண்டு சந்தா ₹2000 என மொத்தம் ₹34,04,285 செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமாரிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது, கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் பாலாஜி, கண்காணிப்பாளர் வேணுகோபால், சங்கத்தின் செயலர் திருமுருகன், முதுநிலை கணக்காளர் கோவிந்தசாமி, ஒன்றிய மேலாளர் ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.