வாரணாசி : கங்கை மாதா என்னை தனது மடியில் ஏந்திக் கொண்டார் என்று பிரதமர் நரேந்தர் மோடி தெரிவித்துள்ளார். தனது தொகுதியான உ.பி. வாரணாசியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, இந்தியாவின் ஜனநாயக மதிப்பு மக்களவைத் தேர்தல் மூலம்
நிரூபணம் ஆகி உள்ளது என்றும் மத்திய அரசின் மிக முக்கியமான நோக்கம் ஏழைகள் மற்றும் விவசாயிகளை பற்றியதுதான் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.