டெல்லி : நீட் தேர்வில் பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். நீட் தேர்வால் 24 லட்சம் மாணவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியான போதும் வழக்கம்போல் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார் என்றும் பீகார், குஜராத், ஹரியானா மாநிலங்களில்தான் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.