புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் மணல் சுரங்க குத்தகைகளை சட்டவிரோதமாக புதுப்பித்தது தொடர்பாக டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இதில் அனைத்து சுரங்க நிறுவனங்களும் முன்னாள் எம்எல்சியும், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியை சேர்ந்தவருமான முகமது இக்பால் குழுமத்துக்கு சொந்தமானதாகும். இந்த வழக்கில் தலைமறைவாக முகமது இக்பாலுக்கு சொந்தமான 121 ஏக்கர் நிலம் மற்றும் குளோபல் பல்கலைக்கழக கட்டிடம்உள்பட ரூ.4440 கோடி அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.