கடலூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் ஆட்டுச் சந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. ஒரு ஆட்டின் விலை ரூ.7000 முதல் ரூ.35,000 வரை விற்பனை செய்யப்பட்டன. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, பெரம்பலூர், தேனி, மதுரை, சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.