சென்னை: கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதன் மூலம் சமீபத்திய நீட் ஊழலில் இருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் கையாலாகாத்தனம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீட் முறைகேட்டில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் முயற்சிகளில் ஒன்றிய அரசு ஈடுபடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.