புதுச்சேரி: புதுவை ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு பரவலை அடுத்து அக்கம்பக்கத்தினர் வெளியேற காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. மூன்று பெண்கள் உயிரிழந்த பகுதியில் வசிக்கும் மக்கள் உடனே வீட்டிலிருந்து வெளியேற போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளனர். வட்டாட்சியர் உள்பட வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறை மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.