சென்னை: நீட் என்னும் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திமுக ஓயாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமூகநீதிக்கும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் என்னும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது. BanNEET இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.