சென்னை: தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை மக்கள் எந்த காலத்திலும் ஆதரிக்க மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். பா.ஜ.க. மட்டுமல்ல திமுக, அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது. பாஜகவின் மதவாத பிரிவினைவாத அரசியல் எடுபடவில்லை. அதிமுக பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.வுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் பேசியுள்ளார்.