சென்னை: அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்; மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடைசிவரை வீரமாகப் போராடி களத்தில் சரித்திரம் படைக்கும் அளவில் நாம் போட்டியிட்டு இருக்கிறோம். ஒரு கோடிக்கு மேல் வாக்குகள் பெற்று அசைக்க முடியாத சக்தியாக கூட்டணியை மாற்றிய அனைவருக்கும் நன்றி. தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026இல் வெற்றிக்கனி பறிக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.