உத்தரபிரதேசம்: பிற்படுத்தப்பட்ட, தலித், சிறுபான்மை, பழங்குடியினரின் கூட்டணியின் வெற்றி இது என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் பதிவிட்டுள்ளார். மக்கள் பலத்தை விட யாருடைய பலமோ, வஞ்சகமோ பெரிதல்ல என்பதை நிரூபித்து விட்டீர்கள். நீங்கள் எங்கள் மீது காட்டிய நம்பிக்கையை முழு பொறுப்புடன் காப்பாற்றி நிறைவேற்றுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.