டெல்லி: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தி ஜனாதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஹரிபரந்தாமன், அக்பர் அலி, சி.டி.செல்வம் உள்ளிட்ட 7 நீதிபதிகள் கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக நடைபெறும் நிகழ்வுகள் அவநம்பிக்கை தருவதாக உள்ளது.
குழப்பம் நிறைந்த இந்த சூழல் வன்முறையில் முடியும் ஆபத்து இருப்பதாகவும் முன்னாள் நீதிபதிகள் கவலை தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.