சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1, 2ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஜூன் 1, 2ல் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. கேரளாவில் இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.