சென்னை: ஜெயலலிதாவை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அண்ணாமலை அவதூறு பரப்புவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான தலைவராக ஜெயலலிதா திகழ்ந்தார். அனைத்து மதத்தினரையும் பொதுவாக மதித்தவர் ஜெயலலிதா என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.