சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மாறும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடகிழக்கு நகர்ந்து புயலாக வலுப்பெறும் என்றும் வங்கக்கடலில் உருவாகிவுள்ள தீவிரப் புயலுக்கு ‘REMAL’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.