மயிலாடுதுறை: மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷனை சேர்ந்தவர் ஆகாஷ் (24). கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா(22). கல்லூரியில் படித்து வந்த இவர்கள் 2 ஆண்டாக காதலித்தனர். திடீரென ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகியதால் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 9ம்தேதி ஆகாசுடன் பைக்கில் பூம்புகார் கடற்கரைக்கு சென்று திரும்பி கொண்டிருந்தபோது சிந்துஜா பெட்
ேராலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் இருவர் மீதும் தீப்பற்றியது. இதில் ஆகாஷ் கடந்த 13ம்தேதி இறந்தார். சிந்துஜா நேற்று உயிரிழந்தார்.