காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு செல்வகாந்தன் என்பவரிடம் பரணிப்புத்தூர் வி.ஏ.ஓ. கிரண்ராஜ் ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டது. வி.ஏ.ஓ. லஞ்சம் கேட்டது குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார் செல்வகாந்தன்.