தேன்கனிக்கோட்டை, மே 19: தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பெட்டமுகிலாளம் ஊராட்சி, போலாக்கொல்லை கிராமத்திற்கு சென்ற போது, வீரபத்திரப்பா என்பவர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார், வீரபத்திரப்பாவை கைது செய்து, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
previous post