டெல்லி: ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் உதவியாளர் வைபவ் குமார் கைது செய்யப்பட்டார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டுக்குச் சென்ற ஸ்வாதி மாலிவால், அவரது உதவியாளர் வைபவ் குமாரால் தாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் வைபவ் குமாரை கைது செய்தது.