சென்னை: தமிழ்நாட்டில் மே 20ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.