சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது. தங்கத்தின் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இதன் உச்சமாக கடந்த 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் சவரன் ரூ.55,120க்கு விற்பனையானது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடுமோ? என்ற அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
தற்போது தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.6,740க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.53,920க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.