தாம்பரம்: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, தாம்பரம் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாட ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
மகளிர்களுக்கு என கட்டணமில்லா பேருந்து, உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளார். காலை சிற்றுண்டி திட்டம் மூலம் பள்ளி குழந்தைகள் அனைவரும் பெரிய அளவில் பயன்பெற்று வருகின்றனர். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஒரு கோடிக்கும் மேலானோர் பயனடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாம்பரம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் நடைபெற்றுள்ளது.
எனவே, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்,’’ என பேசினார். வாக்கு சேகரிப்பின்போது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், விசிக மாவட்ட தலைவர் சாமுவேல், இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஷேக் அப்துல் காதர், திராவிட கழகத்தை சேர்ந்த முத்தையன், காங்கிரஸ் கட்சி ஊடக ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ், மாமன்ற உறுப்பினர் பெரியநாயகம், திமுக நிர்வாகிகள் ஜா.ரவி, கந்தசாமி, வேல்மணி, இரா.செல்வகுமார், காண்டியப்பன், ஜீவன், சீனா, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.