திருப்பூர்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப உருவாகி உள்ளதுதான் இந்தியா கூட்டணி. கலவரம் செய்வது பாஜகவின் டிஎன்ஏவிலேயே கலந்துவிட்ட ஒன்று. நேற்றுகூட திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை பாஜகவினர் கடுமையாக தாக்கினர்.