சென்னை: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான காவல் அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு நடந்ததை மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் சென்னை தெற்கு நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் தொடர்பான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நடந்த காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கான தபால் வாக்குப்பதிவை பார்வையிட்டார்.