சென்னை : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள் என்றும் கல்வியை ஆண், பெண் என இருவருக்கும் சமமாக்கியது நபியடிகள் காட்டிய வழி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.