திருச்சி: திருச்சி லால்குடி அருகே கல்லக்குடி பகுதியில் ரூ.6 லட்சம் பணம், 13 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த பணம், நகையை கொள்ளை அடித்து சென்றனர். அண்மையில் திருமணமான சுந்தர் என்பவரது வீட்டில் இருந்து பணம், நகைகள் திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டது. மர்ம நபர்கள் மேலும் 3 வீடுகளில் கொள்ளையடிக்க முயற்சித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லால்குடி அருகே ரூ.6 லட்சம் பணம், 13 சவரன் நகைகள் கொள்ளை..!!
previous post