சென்னை: தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக மின் நுகர்வு 430.13 மில்லியன் யூனிட்டாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் 29ம் தேதி பதிவான 426.44 மில்லியன் யூனிட் அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில், கடந்த சிலநாட்களாக சென்னையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நடப்பாண்டு கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்தசில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிக்கத்துள்ளது.
இதற்கு முன் ஏப்ரல் 20, 2023 அன்று இருந்த 423.785 MU என்ற உச்ச பயன்பாட்டை விட 7.5 லட்சம் யூனிட்கள் அதிகமாகும். மின் நுகர்வு புதிய சாதனையை முறியடித்த போதிலும், மின்வெட்டு இல்லாத நிலையை தமிழ்நாட்டில் மின்சார வாரியம் TANGEDCO உறுதி செய்துள்ளது. கோடைக்காலம் என்பதால் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
அரசுக்கு சொந்தமான மின் பயன்பாட்டு டிஸ்காம் இன்னும் கூடுதல் மின் தேவை வரும் நாட்களில் ஏற்படலாம் என்று கணித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மின்சார தேவை 21,000 மெகாவாட்டை கடக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இந்த கோடைகாலத்தில் மின்சார தடை நடக்காமல் இருப்பதாற்கான ஏற்பாடுகளை மின்வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றன.
இந்த முறை லோக்சபா தேர்தல் வேறு வரும் நிலையில் மின்சார தடை பிரச்சனையாக மாற கூடாது. இந்த நிலையில் இந்த ஆண்டு அதேபோல் மின்தடை ஏற்பட கூடாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்., அதேபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தேர்வு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு டாங்கெட்கோ தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது, எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக ‘மின் தடை’ இருக்காது. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக் கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று 2-ம் தேதி தினசரி மின் நுகர்வு முதல்முறையாக 430.13 மில்லியன் யூனிட்டாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் 29ம் தேதி பதிவான 426.44 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது.