சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கூரை இடிந்த விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக அபிராமபுரம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.