கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு நிறுத்தப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்து முடித்த நிலையில் தேர்தல் பிரசாரத்தை அவர் துவங்கியுள்ளார். இந்தநிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட வேட்பாளர் குமரகுரு பேசுகையில், ‘யாரு ஓட்டு போடுறாங்களோ… அவங்களுக்கு மட்டும் காச கொடு… எதுக்கு வேஸ்டு… வராதவங்கள விட்டிட்டுபோ.. வேண்டாம்… இதுதான் வரும்…
பாரு… அவங்க நாலணா கொடுத்தா எட்டணா கொடு… எட்டணா கொடுத்தா நாலணா கொடு… நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் காசு கொடுங்க… இதுதான் அரசியல். காதில் விழுந்ததா’ என்று கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளை பார்த்து கேட்கிறார். அவர்கள் மவுனமாக பதிலளிக்கும் நிலையில் காதில் விழல… என வேட்பாளர் கூறுகிறார். இதுகுறித்த வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிமுக வேட்பாளரின் இந்த சர்ச்சை பேச்சு தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.