*மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கினார்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரி எதிரில் தமிழ் சாலை ஜவான் தெருவில் வசிக்கும் வாக்காளர்களிடம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு தேர்தல் திருவிழா அழைப்பிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று பொதுமக்களுக்கு வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேர்மையாக 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் தமிழ் சாலை ஜவான் தெருவில் வசிக்கும் வாக்காளர்களிடம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு தேர்தல் திருவிழா அழைப்பிதழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர்கள் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.மேலும், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி “என் ஓட்டு என் உரிமை” என்னும் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் பொதுமக்களுக்கு திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா , உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.