சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்ற 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 23 வழக்குகளை போலீஸ் பதிவுசெய்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா, 52 கிராம் மெத்தாம்பெட்டமின், 1961 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல். கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.30,000 பணம், 13 செல்போன்கள், 6 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.