சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக வேட்பாளர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி சந்தித்தனர். அப்போது வேட்பாளர்கள் இருவரும் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர் பிரியா, திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், மாநில நிர்வாகிகளும் உடனிருந்தனர்.