திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் எம்சி ரோட்டில் உள்ள ஒரு அரங்கில் நேற்று மாலை வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் பாஜ சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டு பேசுகையில், ‘நான் கடந்த மக்களவை தேர்தலில் தோல்வி பெற காரணம் ஜோலார்பேட்டயை சேர்ந்தவர் தான்(மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி).
அவர் செய்ததின் பலனாக அவர் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. தான் சார்ந்த கட்சியின் சின்னமான இரட்டை இலைக்கு எதிராக வேலை செய்தவர் அவர். மக்களவை தொகுதியில் இந்த நிலை என்றால், அதன் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதே வாணியம்பாடி தொகுதியில் இரட்டை இலையில் போட்டியிட்டவர் அதிக ஓட்டுகளில் வெற்றி பெற்றார் என்றால் எப்படி?’ என்றார்.