நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இது அநீதி என்றும் நாட்டின் தேசிய மலரை சின்னமாக வைத்து இருக்கும் பாஜவின் தாமரை சின்னத்தை முதலில் ஒழிக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியிருந்தார். இதற்கு பாஜ தரப்பிலும் கடும் ஆட்சேபனை தெரிப்பது போல மாநில தலைவர் அண்ணாமலை பேசி இருந்தார். இந்நிலையில் தற்போது பாஜவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் கள்ள கூட்டணி உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். அது தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் நாம் தமிழர் கட்சியியை சார்ந்த சாட்டை துரைமுருகன், தமிழக பாஜ ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா ஆகியோர் பேசியிருந்தனர். அந்த உரையாடலில்
திருச்சி சூர்யா: பாஜ பற்றி ஏன் இப்படி அவதூறாக பேசுகிறீர்கள். அது எதோ ஒரு கண்ணோட்டத்தில் கொண்டு போகுது அண்ேண.
சாட்டை துரைமுருகன்: இல்ல.. இல்ல அடுத்தடுத்த எடுத்து வைக்கப்போகும் மூவில் தெரியும்.
திருச்சி சூர்யா: கொஞ்சம் பார்த்து செய்யுங்கள் அண்ணே
சாட்டை துரைமுருகன்: டாக் அவர்கள் கிடையாது. விட்டுரு நம்முடைய டார்க்கெட் அவங்க தான் என்று தலைவர் சொல்லி விட்டார்.
திருச்சி சூர்யா: யார் அண்ேண
சாட்டை துரைமுருகன்: திமுக தான் நான் காலையில் வீடியோ போட்டதை தலைவரிடம் சொன்னேன். ஏன் எதுக்கு போட்டப்பா. அவரை போய் அடித்து கொண்டு இருக்கிறீங்க என்று கேட்டார். இதை விட்டுறுங்க அடுத்தது பார்த்து கொள்கிறோம்.
திருச்சி சூர்யா: வேற எங்கே அடித்தாலும் பராவாயில்லை
சாட்டை துரைமுருகன்: நீங்கள் சொல்லிட்டிங்கள்ல. இனி ஒழுங்கா பார்த்து கொள்கிறேன். நான் உறுதி மொழி கொடுக்க மாட்டேன். கொடுத்தால் உறுதியாக இருப்பேன். இனிமேல் அது டாக் இல்லை. எப்படி கொண்டு போனுமோ அப்படி நான் பார்த்து கொள்கிறேன். 5 வருடத்தில் பாஜவுக்கு ஓட்டு போட்டு தமிழ்நாடு நாசமாக போகவில்லை.
திருச்சி சூர்யா: அப்ப சின்னம் இல்லை என்ற கோபம் போயிட்டதா?. மனசாட்சிப்படி ஒத்துக்கொள்ள வேண்டும். எங்கள் மீது தப்பு இல்லைல்ல. கூடவே சுத்துறீங்க செவ்வாலை எதேனும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல.
சாட்டை துரைமுருகன்: அரசியலில் அப்படி தான் கிளைம் பண்ண முடியும்.
திருச்சி சூர்யா: அதற்கு எதுக்குங்க எங்களை போட்டு உருட்றீங்க. எல்லாருக்கும் நாங்க தானா.
சாட்டை துரைமுருகன்: மைக் சின்னம் கொடுத்து இருக்காங்க. நாங்க வேற சின்னம் கேட்டு இருக்கிறோம்.
திருச்சி சூர்யா: அது நல்லா தான இருக்கிறது. உங்கள் தலைவருக்கு அடையாளமே மைக் தானங்க.
சாட்டை துரைமுருகன்: கொள்ளிக்கட்டை சவப்பெட்டி இருக்குன்னால்ல. அங்க நீங்க போய் இருக்க வேண்டியது தானே.
திருச்சி சூர்யா: சவப்பெட்டியா அதை கடைசியில் பார்த்து கொள்ளலாம். கடைசியா தேர்தலுக்கு அப்புறம் பார்த்து கொள்ளலாம். எங்க அதுக்கு முன்னாடி போறீங்க. கொஞ்சம் பார்த்து செய்யுங்கள். இனிமேலாட்டும் பார்த்து செய்யுங்கள்.
சாட்டை துரைமுருகன்: இனிமேல் அல்ல. பார்த்து கொள்கிறேன் என்று சொல்லிட்டேன். உங்களிடம் சொல்றது. அவரிடம் சொல்றது மாதிரி தான். இதை அவரிடம் சொல்லிடுங்கள். பொலிட்டிக்கல் பிரசாரம் அவருக்கு. இனிமேல் இப்படி பண்ண மாட்டார் என்று சொல்லிடுங்கள். இவ்வாறு ஆடியோவில் உரையாடல் உள்ளது.