ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மணிகண்டனும் (26), அதே ஊரை சேர்ந்த தேன்மொழி (22) என்பவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த தேன்மொழியின் பெற்றோர் அவரை, கோயம்புத்துரை சேர்ந்த முரளி என்பவருக்கு கடந்த 2020ல் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் தம்பதி கோவையில் வசித்து வந்தனர்.அதன்பிறகு தேன்மொழி, மணிகண்டனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனால் முரளி, தேன்மொழி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கோவை சென்ற மணிகண்டன் தேன்மொழியுடன் கடந்த 17ம் தேதி சென்றவர் நேற்று சொந்த ஊர் வந்தார். அப்போது இருவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.