சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்ய மறுத்த ஆளுநரின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் முறியடித்துள்ளது.
பொன்முடியின் உரிமையையும், ஜனநாயக உரிமையையும் உச்ச நீதிமன்றம் நிலை நாட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பொன்முடிக்கு வாழ்த்துகள். சட்டப்போராட்டம் நடத்தி ஜனநாயக உரிமையை நிலைநாட்டிய முதலமைச்சருக்கு பாராட்டுகள்.