மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் மூன்றாம் நாளான அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளிலும் கம்பீரமாக ஆடி அசைந்து அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த கபாலீஸ்வரரை கூடியிருந்த பக்தர்கள் கபாலி.. கபாலி என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.