சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பு: நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு, தேமுதிகவின் புதுவை தொகுதிக்கு பொறுப்பாளர்களாக உயர்மட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகீர்உசேன், விவசாய அணி துணைச் செயலாளர் கே.திருநாவுகரசு ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு புதுவை மாநிலத்தின் நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், கிளை கழகம் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.