தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக திண்ணை பிரசாரம் போய் சமூக வலைதள பிரசாரத்தை அரசியல் கட்சிகள் கையில் எடுத்து உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் வாட்ஸ்அப்பில் எண்ணுக்கு ‘பிஜேபி ப்ரீ ரீசார்ஜ் யோஜனா’ என்று ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. வடமாநிலங்களில் இருந்து பாஜ கட்சியினர் செல்போன் மூலம் பரப்பி வருகின்றனர். குறிப்பாக ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் செல்போனுக்கு இந்த தகவல் அனுப்பட்டு வருகின்றன. ‘பிஜேபி கட்சிக்கு 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஓட்டு போடுவதால் மூன்று மாத இலவச மொபைல் ரீசார்ஜ் பலனை பெறலாம்’ என லிங்க் அனுப்பப்படுகிறது.
அதனை தொட்டு உள்ளே சென்றால் எந்த கம்பெனி நெட்வொர்க் பயன்படுத்துகிறோமோ அதனை தேர்வு செய்து மொபைல் எண்ணை பதிவு செய்ய பணிக்கப்படுகிறது. அவ்வாறு மொபைல் எண்ணை பதிவு செய்த பின் இந்த மெசேஜை 10 வாட்ஸ்அப் குரூப்பில் பரப்புவதன் மூலம் உங்களுக்கு 3 மாத இலவச மொபைல் ரீசார்ஜ் செய்யப்படும் என்பதே என அதில் காட்டுக்கிறது. ஆனால் அந்த செய்தியை பரப்பியவர்களுக்கு ரீசார்ஜ் எதுவும் செய்யப்படவில்லை. இந்த பொய் பிரசாரம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.