சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மணலூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், ‘‘எச்சரிக்கிறோம். முந்தா நாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்ணாமலையே… நாங்கள் சிங்க கூட்டம். எங்கள் புரட்சித் தமிழரை பற்றி பேசாதே… அரவேக்காடு அண்ணாமலையே எச்சரிக்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.