டெல்லி: தபால் வாக்கு சீட்டுகளை தயார் செய்யும் பணியை கண்காணிக்க தனியாக ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும். தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள அரசு அச்சகங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். தபால் வாக்கு சீட்டு அச்சடிக்கும் பணி விவரங்களை கண்காணிக்க வேட்பாளர்கள் தங்களின் ஏஜெண்டுகளை நியமிக்கலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளது.