சென்னை: தேர்தல் பத்திரங்கள் மூலம் செய்த மெகா ஊழலில் இருந்து பாஜக தப்பிக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற பாஜகவின் ஊழல் உச்சநீதிமன்ற தலையீட்டால் வெளிவந்துள்ளது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.