கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் ஷேக் ஷாஜகானுடன் தொடர்புடைய தொழிலதிபர்கள் இரண்டு பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.