கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா மக்களவை தொகுதியில் வாய்ப்பு வழங்காததால் முதல்வர் மம்தாவின் தம்பியான பபுன் பானர்ஜி அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் இவர் பாஜவில் இணையக்கூடும் என்ற செய்தி பரவி வருகின்றது. இதனிடையே டெல்லியில் இருக்கும் பபுன் பானர்ஜி இது குறித்து கூறுகையில், ‘‘ஹவுரா மக்களவை தொகுதி வேட்பாளர் தேர்வினால் நான் மகிழ்ச்சி அடையவில்லை. ” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜல்பைகுரியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ஒவ்வொரு முறை தேர்தலின்போதும் பபுன் பானர்ஜி ஒரு பிரச்னையை உருவாக்குகிறார். அவருடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதற்கு முடிவு செய்துள்ளேன்” என்றார்.