சென்னை: தமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வண்டலூர் ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சிக் கல்லூரி கூடுதல் இயக்குநராக பி.சி.தேன்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக வி.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை துணை ஆணையர் பி.பாலாஜி, காவலர் நலத்துறை ஏ.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.